Friday, March 15, 2019

தமிழ் ...தமிழ் ...

குறைவில்லா வளத்துடனே இளமையொடு வாழும் 
***குன்றாத புகழோடு குவலயத்தை யாளும் !
நிறைவான இலக்கணந்தான் செம்மொழியைக் காக்கும் 
***நிகரில்லா இலக்கியங்கள் உலகோரை யீர்க்கும் !
அறநெறியைப் புகட்டிநல்ல தாயாகத் தாங்கும் 
***அறிவொளியைத் தான்கூட்டி அகவிருளை நீக்கும் !
சிறப்புகளை அளந்திடிலோ அதன்பெருமை நீளும் 
***செம்மாந்த தமிழிங்கு யாம்பெற்ற பேறே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment