Friday, March 15, 2019

இடையிசை வண்ண எழுசீர் விருத்தம் ...!!!


தய்ய தய்யதன தய்ய தய்யதன
தய்ய தய்யதன தய்யனா
துள்ளு முள்ளமது நல்ல பிள்ளையொடு
தொல்லை யில்லைதுய ரில்லையே!
கள்ள மில்லதொரு பள்ளி செல்லவிடு
கல்வி நெய்யுமிட ரில்லையே!
அள்ளு தெள்ளமுதை யுள்ளி யெவ்வளவு(ம்)
அய்ய(ன்) வள்ளுவனை மெல்லவே!
எள்ள லில்லையிது பொய்யு மில்லையறி
எவ்வை வெல்லவழி செய்யுமே!!
( எவ்வை - கவலை )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment