Monday, July 16, 2018

ஒற்றிலாக் குறள் ...!!

அலைகளி லாடு மழகிய மீனை
வலைவீசி வாரிடநீ வா .

கைவிர லாலே கவிதை எழுதியே
மைவிழி யாளை வளை.
முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை .
பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது .
கருநீல மேனியனே காதலொடு பாட
வருவாயா தேடி மனை .
தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது.
இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment