அலைகளி லாடு மழகிய மீனை
வலைவீசி வாரிடநீ வா .
வலைவீசி வாரிடநீ வா .
கைவிர லாலே கவிதை எழுதியே
மைவிழி யாளை வளை.
மைவிழி யாளை வளை.
முழுமதி போலே முகமுடை யாளை
அழவிட லாமோ அழை .
அழவிட லாமோ அழை .
பெரிய வுருவொடு பேரழ கான
அரிய வரிமா வது .
அரிய வரிமா வது .
கருநீல மேனியனே காதலொடு பாட
வருவாயா தேடி மனை .
வருவாயா தேடி மனை .
தனிமை யிரவு வனிதை மகிழ
இனிய கவிதை எழுது.
இனிய கவிதை எழுது.
இரவு நிலவோ டினிய உறவு
விரிய விரிய இளகு
விரிய விரிய இளகு
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment