Monday, July 16, 2018

குறள் வித்தகம் !

அடி முடி இடை முரண் குறள்
*****************************************
வெண்மதியைக் கார்மேகம் மூடித் திறப்பதைக்
கண்ணிருந்தும் காணாதோ சம்பு.
( சம்பு - சூரியன் )
ஆடா(து) அசையாது செந்நெல் பசும்வயலில்
பாடாமல் பாடிநீ யாடு.
இரவும் பகலும் உறங்கி விழித்தால்.
வருவாயும் வாரா(து) ஒளி.
நல்லன கெட்டன ஆராய்ந் தறியாயேல்
நில்லாமல் செல்லுமோ தீது.

போய்விடும் வந்ததுபோல் இன்பமும் துன்பமும்
வாய்மையுடன் பொய்விலக்கி வா .
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment