Thursday, May 18, 2017

என்னை நீயும் மறந்ததேன் ....!!!



என்னை நீயும்  மறந்ததேன் 
விழிகள் அழுது சிவந்ததேன்
கண்ணை இமைகள் மறந்ததேன்
காரிருள் என்னைச் சூழ்ந்ததேன் ?

காற்றும் கனலாய்ச்  சுடுவதேன் 
கவலை நெஞ்சை அரிப்பதேன்
காதல் இதயம் கசிவதேன் 
கண்ணீர்க் குளமும் வறண்டதேன் ?

மௌனம் குடைந்து கொல்வதேன் 
மனமும் வலியால் மரத்ததேன்
மஞ்சம் நெருப்பை உமிழ்வதேன்  
மரண   வாயில் தெரிவதேன் 

புலன்கள் ஐந்தும் தவிப்பதேன் 
புரித லின்றிப் போனதேன் 
பொழிந்த பாசம் மறைந்ததேன் 
பொறுமை காக்க மறுத்ததேன் ?

அன்னை போல காத்தவன் 
அன்பை வாரித் தெளித்தவன் 
அணைத்து உயிரில் உறைந்தவன் 
அழவும் வைக்கத் துணிவனோ ?

இந்த நிலையும் மாறுமோ  
இருளும் விலகி யோடுமோ 
இறைவா உனையே நம்பினேன் 
இன்பம் மீட்டுத் தந்திடு !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment