Thursday, May 18, 2017

சந்திப்போமா நாம் சந்திப்போமா ...??


சாயுங்கால வேளையில சந்தக்கட வீதியில 
***சந்திப்போமா நாம் சந்திப்போமா ?
தேயும்நிலா வானிருக்க தேவதநீ பக்கம்வர 
***சிந்திப்போமா நாம் சிந்திப்போமா ?

ஊருசனம் பாக்குமுன்னே ஊதக்காத்து வீசயில 
***ஊஞ்சலிலே சேர்ந்து  விளையாடுவோமா ?
பேருபெற்ற கோயிலில பேச்சியம்மா  சன்னிதில 
***பேசிமணம்தான் முடிக்க வேண்டுவோமா ?

பஞ்சுமிட்டாய்ச் சீலகட்டி பையநீயும் கிட்டவர
***பட்டுக்கன்னம்  தொட்டு முத்தமிடுவோமா ?
அஞ்சுகமே ஒன்னஅள்ள அத்தான்மனம் கெஞ்சுதடி 
***அச்சம்விட்டு மெல்லக் கட்டியணைப்போமா ?

வட்டபொட்டு நெத்தியில வச்சிக்கிட்டு வாரவளே
***வச்சகண்ணால் செண்டாய் நீயும்பூத்தாயே !
சிட்டுப்போல ஒன்சிரிப்பில் சில்லுவண்டாய்ச் சுத்திவாரேன் 
***செல்லக்கிளி கொஞ்சி பேசவருவாயா ?

மஞ்சத்தாலி ஒன்கழுத்தில் மாமன்கட்டும் நேரத்துல 
***மைவிழியே ஓரக் கண்ணால்ரசிப்பாயா ?
மஞ்சத்துல வொன்னஅள்ளி மல்லிகப்பூ வாசத்துல 
***மையலுடன் கதை சொல்லிமுடிப்பேனே !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment