Thursday, May 18, 2017

பாவலர் வரதராசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து ....!!!



தன்னல மின்றித் தமிழ்ப்பணி யாற்றிடும் 
அன்பிற் கினியநல் லாசானே! - நன்றியுடன் 
நின்பிறந்த நாளினில் நெஞ்சார வாழ்த்துகிறோம் 
இன்பாவாம் வெண்பாவில் ஈண்டு .

பாவலரே தித்திக்கும் பைந்தமிழின் காவலரே 
ஆவலுடன் கற்பித்தாய் யாப்பெமக்கு! - சேவையினை 
மெச்சியுளம் பூத்தோம் மிளிர்வாய் தமிழுலகில் 
உச்சம் தொடுவாய் உயர்ந்து.

சோதனைவந் தாலும் துணிவோ(டு) எதிர்கொண்டு 
சாதனை யாக்கும் தமிழ்மகனே ! - பேதமின்றி 
பாவகைகள் பற்பலவும்  பாங்குட னூட்டிவிட்டாய் 
பூவலியம் வாழ்த்தும் புகழ்ந்து .

வரமாய்,யாம் பெற்ற வரதரா சா,நீ 
சிரத்தையுடன் கற்பித்தாய் சிந்து ! - மரபுமா
மன்னா! உதித்தநாளில் வாழ்த்தி அகமலர்வோம் 
என்றும் மகிழ்வாய் இனிது. 

No comments:

Post a Comment