Monday, February 27, 2017

வெண்கலிப்பா ....!!!

வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை 
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால் 
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .



★பொது இலக்கணம்.
*நான்கு சீர்கள் கொண்டதாய்,
*நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய்,(பயிற்சிக்கு நான்கடிகளே போதும்)
*முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய்,
* ஈற்று சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும்,
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.

No comments:

Post a Comment