Saturday, February 4, 2017

தென்றலேநீ போய்ச்சொல்லு !!!

ஓடுகிற தண்ணியில ஓலஒன்னு நாஅனுப்ப 
காடுவழி போறபுள்ள கையிலதான் கெடச்சிருச்சா?
பாடுகிறேன் இக்கரையில் பாட்டொனக்குக் கேக்கலையா?
தேடுகிறேன் என்னுசுரத் தென்றலேநீ போய்ச்சொல்லு !

சந்தைக்கு நான்போறேன் சம்மதமா கூடவர
அந்திசாயும் பொழுதினிலே அவசரமா திரும்பிடலாம் !
தொந்தரவா நெனைக்காதே தூக்கமில்ல வொன்நெனப்பில் 
வெந்துமனம் சாகிறனே வேதனயத்   தீர்ப்பாயோ? 

கூடிவரும் மேகமெல்லாம் கூராப்பு போட்டிருச்சே 
வாடிபுள்ள  வெரசாக மழபெஞ்சா நனஞ்சிடுவ! 
ஓடிவந்து மச்சான உரிமையோடக் கட்டிடடி 
சோடிபோட்டுச் சுத்திடலாம் சொக்கவச்ச சுந்தரியே !

No comments:

Post a Comment