Thursday, December 8, 2016

வளமாக வாழ்ந்திடுவோம் ....!!!

கரமிரண்டும் சேர்ந்தால்தான் பிறக்கும் சத்தம் 
****கவனத்தில் கொண்டாலே தெளியும் பித்தம் !
உரமிட்டு வளர்த்திடுவோம் உறவைப் பேணி 
****உரிமையுடன்  கரைசேர்க்கும்  பாசத் தோணி !
தரணியிலே தாயன்புக் கீடே யில்லை  
****தண்டமிழின் இனிமைக்கு முண்டோ யெல்லை   !
வரமான பண்பாட்டைக் கண்போல் காத்து 
****வளமாக வாழ்ந்திடுவோம்  மண்ணில் பூத்தே  ...!!

No comments:

Post a Comment