Tuesday, December 20, 2016

ஒற்றை ரோஜா ....!!!


முள்ளிடையே மலர்ந்தாலும் மோகனமாய்ப் புன்னகைக்கும் 
கள்ளிருக்க வண்டீர்க்கும் காற்றினிலே அசைந்தாடும் 
கிள்ளியதைச் சூடிடவே கெஞ்சிநிற்கும் கன்னிமனம் 
கொள்ளைகொள்ளும் காதலரைக் கொஞ்சிடவே ஏங்கிநிற்கும்  !

இளஞ்சிவப்பு நிறத்தினிலே இனிதாக மொட்டவிழும் 
இளங்காலைப் பொழுதினிலே இதயத்தை வருடிவிடும் 
களங்கமிலாப் பனித்துளியைக் கனிவுடனே சுமந்திருக்கும் 
உளம்விரும்பும் மலர்களிலே ஒற்றைரோஜா மிகவழகே !

No comments:

Post a Comment