Tuesday, June 23, 2015
இணையத் தமிழே இனி ....!!
இணையத் தமிழே இனிய வரமாம்
துணைவரும் என்றென்றும் துய்க்க - இணையிலாத்
தன்மையால் தாயாய்த் தரணியை ஆண்டிடும்
தொன்மைத் தமிழே தொடர்ந்து .
வியக்கும் வகைதனில் விஞ்ஞான ஞானம்
உயர்த்தும் தொழில்நுட்பம் ஓம்பி - நயமாய்
இதழ்கள் வெளியாகி ஏற்ற மளிக்கும்
முதன்மையாய்த் தோன்றும் முனைந்து .
காலத்திற் கேற்ற களமாய் இணையமே
ஞாலத்தில் நல்லறிவை நாட்டிடும் - நூலகமாய்ப்
புத்தியைத் தீட்டிப் புதுமைகள் செய்விக்கும்
சத்தாம் இணையத் தமிழ் .
அழியா நிலையை அடைந்தேப் பொலிவாய்த்
தழைக்கும் இணையத் தமிழே ! - மொழியிற்
சிறந்தே பவனிவரும் சீராய் உலகில்
இறவாப் புகழினை ஏற்று .
கறையான் அரிக்காது; கள்வன் திருடான்
நிறைவாய் வளரும் நிதமும் - முறையாய்
அணையாகக் காக்கும்; அறிவியல் பேசும்
இணையத் தமிழே இனி .
(ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2015 ல் மூன்றாம் இடம் பெற்ற கவிதை இது )
Monday, June 22, 2015
Sunday, June 21, 2015
அழிப்போம் சீமைக் கருவேல மரத்தை !
சீமைக் கருவேலம் சீரழிக்கும் மண்வளத்தை
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய்
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு .
அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும்
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய்
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும்
குமையும் மனமும் கொதித்து .
உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும்
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள்
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும்
சளைக்காமல் வெட்டிடுவோம் சாய்த்து .
மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை
மிச்ச மிருக்காமல் வெட்டு .
தீமை விளைவிக்கும் தேவையின்றி - ஊமையாய்
நின்றே உறிஞ்சும் நிலத்தடித் தண்ணீரை
நன்றாய் துளிர்த்திடும் நஞ்சு .
அடர்ந்து வளர்ந்திடும் ஆக்கிர மிக்கும்
படர்ந்து செழித்துப் பரவும் - விடமாய்
அமைந்த கொடுமுள்ளால் ஆபத்தும் நேரும்
குமையும் மனமும் கொதித்து .
உயிர்வளியை சொற்பமாய் உற்பத்திச் செய்யும்
உயிரினங்கள் வாழ உதவா - பயிர்கள்
விளையவிடா காட்டு விடத்தருவை நாமும்
சளைக்காமல் வெட்டிடுவோம் சாய்த்து .
மண்ணின் எதிரியை மண்ணைவிட்டேப் போக்கிட
கண்மூடி வெட்டிக் களைந்திடுக - எண்ணிடவே
அச்சம் விளைத்தே அபாயமளிக் கும்மரத்தை
மிச்ச மிருக்காமல் வெட்டு .
Saturday, June 20, 2015
தனிமையுடன் நாளைத் தள்ளிடுவேன் அன்பே !!
பெண்ணுன்னைப் பார்த்தேன்
****பிரமித்து நின்றேன் !
கண்பார்த்துப் பூத்தேன்
****காதலிலே வீழ்ந்தேன் !
எண்ணற்றப் பாக்கள்
****ஏக்கமுடன் யாத்தேன் !
வண்டாக உன்னை
****வட்டமிட்டு வந்தேன் !
தென்றலெனத் தவழ்ந்தாய்
****தெவிட்டாமல் இனித்தாய் !
பொன்னென்று நினைத்தேன்
****புன்னகையால் கொன்றாய் !
மின்னலென ஒளிர்ந்தாய்
****மின்வெட்டாய் மறைந்தாய் !
என்னென்று சொல்வேன்
****ஏமாற்றம் தந்தாய் !
கனிந்திட்ட நெஞ்சம்
****கசந்ததுவும் ஏனோ ?
அனிச்சமலர் போலே
****அகம்வாட லாமோ ?
இனியென்றன் வாழ்வில்
****இடம்பெண்ணுக் கில்லை !
தனிமையுடன் நாளை
****தள்ளிடுவேன் அன்பே ...!!!
****பிரமித்து நின்றேன் !
கண்பார்த்துப் பூத்தேன்
****காதலிலே வீழ்ந்தேன் !
எண்ணற்றப் பாக்கள்
****ஏக்கமுடன் யாத்தேன் !
வண்டாக உன்னை
****வட்டமிட்டு வந்தேன் !
தென்றலெனத் தவழ்ந்தாய்
****தெவிட்டாமல் இனித்தாய் !
பொன்னென்று நினைத்தேன்
****புன்னகையால் கொன்றாய் !
மின்னலென ஒளிர்ந்தாய்
****மின்வெட்டாய் மறைந்தாய் !
என்னென்று சொல்வேன்
****ஏமாற்றம் தந்தாய் !
கனிந்திட்ட நெஞ்சம்
****கசந்ததுவும் ஏனோ ?
அனிச்சமலர் போலே
****அகம்வாட லாமோ ?
இனியென்றன் வாழ்வில்
****இடம்பெண்ணுக் கில்லை !
தனிமையுடன் நாளை
****தள்ளிடுவேன் அன்பே ...!!!
Subscribe to:
Posts (Atom)