Sunday, February 24, 2019

வண்ணப் பாடல் !!


சந்தக் குழிப்பு
******************
தந்தன தானா தந்தன தானா
தந்தன தானா . . . . தனதானா
என்கன வேவா மஞ்சுள மேவா
என்துணை நீயே . . . . உணராயோ ?
இன்றுனை நேராய் நெஞ்சொடு சேயாய்
இன்புடன் கையா . . . . லணைவேனோ ?
தென்றலி னூடே சென்றிடு வாயோ
செங்கதிர் மேலே . . . . வருவேளை !
தெங்கிள நீராய் வண்டமி ழைநான்
சிந்திட வேநீ . . . . இளகாயோ ??
அன்பொடு தாராய் பஞ்சணை மேலே
அஞ்சிட லாமோ . . . . அழகேசொல் !
அந்தமி ழாலே பொங்கிடும் பாவாய்
அங்கயல் மீனாம் . . . . விழியாளே !
கண்டத னாலே கொஞ்சிட லாமா
கண்குளிர் வாயோ . . . . கனிவோடே !
கம்பனின் தோழா என்றெனை நீயே
கந்தளம் போலே . . . . ஒளிர்வேனே ...!!
(கந்தளம் - பொன் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment