Wednesday, February 13, 2019

வண்ணப்பாடல் - காதல்




சந்தக் குழிப்பு
**********************
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதானா
சிற்றிடை வளைவொடு பொற்சிலை யெனவவள்
சித்திர மெழுதிய ததுபோலே !
சிட்டென மலர்பவள் முத்தென மிளிர்பவள்
செப்பிடும் மொழியது மதுவாக !
விற்புரு வமுமெழில் நெற்றியும் பிறையென
மித்திரை யவள்முக மொளிவீச !
வெட்கமு மணிசெயும் நற்குல மகளுடன்
மெச்சிடு வகையினி லிணைவேனோ ?
சுற்றிய புடவையும் பட்டுடல் நழுவிடும்
சொக்கிடும் படியவ ளிடையோடே !
தொட்டிட வுளமது பற்பல கனவொடு
சொத்தென வவள்மடி தவழ்வேனோ ?
உற்றவ ளவளென நெக்குரு கிடுவதும்
உச்சித மெனமனம் விழையாதோ ?
உத்தமி நினைவொடு சொப்பன நிலையதில்
ஒத்துயி ருடலுட னுழல்வேனே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment