நிறமேழாய் வளைந்திருந்தாய் ஆகாய வீதியிலே
***நெஞ்சத்தை வளைத்துவிட்ட அரைவட்டப் பேரழகே !
சிறகிருந்தால் பறந்துவந்து பூமிக்குக் கொண்டுவந்து
***சிறைவைப்பேன் இதயத்தில் காதலுடன் கவிவனைவேன் !
உறவாட வருவாயா உறைந்தங்கே நிற்பாயா
***உரிமையுடன் கேட்கின்றேன் வானவில்லே பதிலுரைப்பாய் !
துறந்திடவும் மனமில்லை துடிப்பென்னுள் அடங்கவில்லை
***தொலைந்தேனே உன்னழகில் கண்ணைவிட்டு மறையாதே !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment