Sunday, April 9, 2017

கண்ணைவிட்டு மறையாதே ....!!!



நிறமேழாய் வளைந்திருந்தாய் ஆகாய வீதியிலே 
***நெஞ்சத்தை வளைத்துவிட்ட அரைவட்டப் பேரழகே !
சிறகிருந்தால் பறந்துவந்து பூமிக்குக் கொண்டுவந்து 
***சிறைவைப்பேன் இதயத்தில் காதலுடன் கவிவனைவேன் !
உறவாட வருவாயா உறைந்தங்கே நிற்பாயா 
***உரிமையுடன் கேட்கின்றேன் வானவில்லே பதிலுரைப்பாய் !
துறந்திடவும் மனமில்லை துடிப்பென்னுள் அடங்கவில்லை 
***தொலைந்தேனே  உன்னழகில் கண்ணைவிட்டு மறையாதே !  

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment