இசைக்க இயலுமோ இதயம் ஒடிந்தபின்
***இமைகள் இணையுமோ இரவின் மடியினில்
அசைக்கும் நினைவுகள் அடங்க மறுத்திட
***அகத்தில் எங்ஙனம் அமைதி மலர்ந்திடும் ?
துணையாய் வாழ்வினில் துயரைப் போக்கிட
***துடிக்கும் மனத்தினில் துக்கம் துடைத்திட
அணைக்கும் கரங்களாய் அன்பு காட்டிட
***அன்னை வந்திடு அருளை வழங்கிடு !
இருக்கும் நாள்வரை என்னை உணர்த்திடு
***இறைவி உன்னையே என்றும் நம்புவேன்
திருவே சங்கடம் தீர்த்தே ஆதரி
***தினமும் என்னுளே தெளிவைத் தந்திடு !
விதியை மாற்றிட விரைந்து வந்திடு
***வினைகள் யாவையும் விலக்கி ஓட்டிடு
கதியே நீயென கண்ணீர் மல்கிட
***கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு !
சியாமளா ராஜசேகர்
***இமைகள் இணையுமோ இரவின் மடியினில்
அசைக்கும் நினைவுகள் அடங்க மறுத்திட
***அகத்தில் எங்ஙனம் அமைதி மலர்ந்திடும் ?
துணையாய் வாழ்வினில் துயரைப் போக்கிட
***துடிக்கும் மனத்தினில் துக்கம் துடைத்திட
அணைக்கும் கரங்களாய் அன்பு காட்டிட
***அன்னை வந்திடு அருளை வழங்கிடு !
இருக்கும் நாள்வரை என்னை உணர்த்திடு
***இறைவி உன்னையே என்றும் நம்புவேன்
திருவே சங்கடம் தீர்த்தே ஆதரி
***தினமும் என்னுளே தெளிவைத் தந்திடு !
விதியை மாற்றிட விரைந்து வந்திடு
***வினைகள் யாவையும் விலக்கி ஓட்டிடு
கதியே நீயென கண்ணீர் மல்கிட
***கைகள் கூப்பினேன் கவலை போக்கிடு !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment