பாசப் பூந்தேரே ...பிள்ளை நான் இங்கே ...
பாடும் பாடலினைக் கேட்பாய் ...
பக்கத்தில் இருந் தாய் பண்போடு வளர்த் தாய்
பக்குவமாய் நீ தான் பார்போற்ற வைத் தாய்
என்னன்னையே என்தெய்வமே நீ தான் ( பாசப் பூந்தேரே )
துன்பம் தீண்டும் போதிலே தூக்க மின்றி வாடினேன்
அன்பு நெஞ்சம் துடித்திட அன்னை உன்னைத் தேடினேன்
இன்பம் கொஞ்சும் வேளையில் இன்றும் எண்ணி ஏங்கினேன்
பொன்னைப் போன்ற உன்னிடம் பொங்கும் பாசம் வேண்டினேன்
பிச்சிப்பூவைப் போலே வெள்ளைமனம் கொண்டாய்
உச்சிமுகர்ந்து அன்பாய்க் கோடிமுத்தம் தந்தாய்
வாழ்நாளெ லாம் நான்போற்றுவேன் தா யே ! ( பாசப் பூந்தேரே )
கோவிலுக்குள் இல்லையே கும்பிடவும் சாமி யே
தேவியுன்னைக் காண்கிறேன் தெய்வமாக வீட்டி லே
ஆவியென்னுள் துடிக்குது ஆசைமுகம் பார்க்க வே
பாவிநெஞ்சம் பாடுது பாசத்தோடு நாளு மே
அன்னைமடிக் கேங்கும் பிள்ளையென்னைப் பாராய்
சென்று விட்ட போதும் பிள்ளை யாய்நீ வாராய்
வாழ்நாளெ லாம் நான்போற்றுவேன் தா யே ! ( பாசப் பூந்தேரே )
( காதல் ரோஜாவே என்ற மெட்டில் தாயைப் போற்றும் பாடல் )
No comments:
Post a Comment