Tuesday, April 19, 2016

சித்தரைப் பெண்ணே !


மாதங்களின் தலைமகளே 
மார்கழியாள் உடன்பிறப்பே 
மாவிளக்கு ஏற்றிவைத்து 
மாலைசூட்டி வரவேற்போம் 
மாலவனின் அருளாலே 
மாதவத்தின் பயனாலே 
மாணிக்க வீணையேந்தி 
மதுரகானம் மீட்டிடவே 
மாண்புடனே வந்திடுவாய் 
மகிமைபல புரிந்திடுவாய் 
மாசுகளை மாய்த்திடுவாய் 
மாறுபாடு அகற்றிடுவாய் ....!!! 

No comments:

Post a Comment