கவிபோன்ற விழியாளே கற்கண்டு மொழியாளே
புவிவெல்லும் பார்வையினால் புன்னகையும் பூப்பவளே
தவிக்கின்ற நெஞ்சத்தின் தன்மையினை அறியாயோ
செவிசாய்ப்பாய்ச் சற்றேனும் தெரிவிப்பாய் சம்மதத்தை !
அரும்பானக் காதலதும் அழகாக மலர்ந்திடுமோ
மருதாணி யிட்டக்கை மன்னவனைத் தீண்டிடுமோ
வருவாயே நளினமுடன் வளர்பிறையாய் வாழ்வினிலே
திருநாளில் உன்கழுத்தில் திருநாணும் பூட்டிடுவேன் !
அலங்கார நகைநட்டு அன்பளிப்பாய் நான்விரும்பேன்
கலங்காமல் ஆயுளுக்கும் காத்திடுவேன் கண்போலே
நலம்வாழ வேண்டுகிறேன் நாயகியே வரந்தருவாய்
நிலம்போலப் பொறுமையுடன் நித்தமுனைத் தாங்கிடுவேன் ...!!!
No comments:
Post a Comment