Tuesday, April 19, 2016

கூடிக் கும்மாளம் போடுவோமே ....!!!


பள்ளி விடுமுறை விட்டாச்சு 
துள்ளி விளையாட வாருங்களேன் 
வெள்ளி முளைத்திடும் வேளைவரை 
உள்ளம் களித்திட ஆடிடுவோம் ! 

நித்தம் படித்ததால் சோர்வுநீங்க 
மொத்த நட்புகளும் ஒன்றிணைந்து 
சித்தங் குளிர்ந்திடச் சோலையிலே 
புத்தும் புதுக்கதைப் பேசிடுவோம் ! 

வெயிலும் கொளுத்திடக் கவலையின்றி 
மயில்போல் நடனமும் ஆடிடுவோம் 
குயிலாய்க் கூக்குரல் எழுப்பிடுவோம் 
வயிற்றுப் பசிதனை மறந்திடுவோம் ! 

தேடித் தண்ணீரைத் தெளித்துவிட்டுக் 
கோடி இன்பமும் பெற்றிடுவோம் 
பாடித் திரிந்திடும் பறவைகளாய் 
கூடிக் கும்மாளம் போடுவோமே ....!!!

No comments:

Post a Comment