Tuesday, April 19, 2016

இளவேனிலே வா ...!!!



இன்முகங்காட்டி இன்பங்கூட்ட 
இசைந்தாடிவா இளவேனிலே ! 

அன்பெனும்பூமி அழகாய்ப்பூக்க 
அசைத்தாடிவா இளவேனிலே ! 

கன்னித்தமிழே கன்னல்மொழியாம் 
களித்தாடிவா இளவேனிலே ! 

சின்னஞ்சிறிய சிறகினைவிரித்தே 
சிரித்தாடிவா இளவேனிலே ! 

வண்ணக்கோலம் வசந்தகாலமாய் 
வளைந்தாடிவா இளவேனிலே ! 

எண்ணப்பூக்கள் எழுத்தில்சேர 
எழுந்தாடிவா இளவேனிலே ! 

தண்டமிழ்ப்பாக்கள் தரணியில்பூக்க 
தழைத்தாடிவா இளவேனிலே ! 

புண்பட்டநெஞ்சம் புத்துணர்வுற 
புரிந்தாடிவா இளவேனிலே ! 

பெண்ணெனும்சக்தி பெருமைபெற்றிட 
பிழைத்தாடிவா இளவேனிலே ! 

நண்பர்வட்டம் நலம்வாழ்ந்திட 
நகைத்தாடிவா இளவேனிலே !

No comments:

Post a Comment