இன்முகங்காட்டி இன்பங்கூட்ட
இசைந்தாடிவா இளவேனிலே !
அன்பெனும்பூமி அழகாய்ப்பூக்க
அசைத்தாடிவா இளவேனிலே !
கன்னித்தமிழே கன்னல்மொழியாம்
களித்தாடிவா இளவேனிலே !
சின்னஞ்சிறிய சிறகினைவிரித்தே
சிரித்தாடிவா இளவேனிலே !
வண்ணக்கோலம் வசந்தகாலமாய்
வளைந்தாடிவா இளவேனிலே !
எண்ணப்பூக்கள் எழுத்தில்சேர
எழுந்தாடிவா இளவேனிலே !
தண்டமிழ்ப்பாக்கள் தரணியில்பூக்க
தழைத்தாடிவா இளவேனிலே !
புண்பட்டநெஞ்சம் புத்துணர்வுற
புரிந்தாடிவா இளவேனிலே !
பெண்ணெனும்சக்தி பெருமைபெற்றிட
பிழைத்தாடிவா இளவேனிலே !
நண்பர்வட்டம் நலம்வாழ்ந்திட
நகைத்தாடிவா இளவேனிலே !
No comments:
Post a Comment