எண்சீர்ச் சந்த விருத்தம் ...!!!
****************************************
காவிரியில் நீரோடக் கண்டவுள்ள மாடும்
***காதலுடன் மன்னவனைக் கண்விரியத் தேடும் !
ஓவியமாய்க் கள்ளமிலா நெஞ்சத்தில் நிறைந்த
***உத்தமனைக் கரையோரம் காணாமல் வாடும் !
பூவிலுள்ள மதுவுண்ணச் சுற்றிவந்து பாடும்
***பொன்வண்டைத் தூதனுப்ப அன்புடனே வேண்டும் !
தாவிவரும் சிற்றலைகள் தனிமையிலே நிற்கும்
***தையலெனைப் பரிவுடனே தள்ளாமற் போகும் !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment