Friday, January 29, 2016

லிமரைக்கூ ....!!!


நித்தமும் அதிகாலை எழுவாய் 
அன்றைய நாள் சுகமாய்த் தொடர 
கைகூப்பி இறைவனைத் தொழுவாய் ! 
********************** 
கடிக்க இனித்திடும் கரும்பு 
மென்று தின்று கீழே போட்டால் 
ருசிக்க வந்திடும் எறும்பு ! 
************************* 
தலைவனின்றித் தகித்தது மஞ்சம் 
வருகைக்காய் காத்தவிழி பூத்துப் போக 
தவியாய்த் தவித்தது நெஞ்சம் ! 
************************* 
குடித்துவிட்டுப் போடுவான் ஆட்டம் 
சீர்கெட்டுக் குடல்வெந்து துடியாய்த் துடித்து 
அடங்கிடுமே மூச்சின் ஓட்டம் ! 
************************** 
வானில் தவழும் மேகம் 
கண்டதும் தானாய்க் கவிதை பிறக்க 
இதயம் மறக்கும் சோகம் !

No comments:

Post a Comment