நித்தமும் அதிகாலை எழுவாய்
அன்றைய நாள் சுகமாய்த் தொடர
கைகூப்பி இறைவனைத் தொழுவாய் !
**********************
கடிக்க இனித்திடும் கரும்பு
மென்று தின்று கீழே போட்டால்
ருசிக்க வந்திடும் எறும்பு !
*************************
தலைவனின்றித் தகித்தது மஞ்சம்
வருகைக்காய் காத்தவிழி பூத்துப் போக
தவியாய்த் தவித்தது நெஞ்சம் !
*************************
குடித்துவிட்டுப் போடுவான் ஆட்டம்
சீர்கெட்டுக் குடல்வெந்து துடியாய்த் துடித்து
அடங்கிடுமே மூச்சின் ஓட்டம் !
**************************
வானில் தவழும் மேகம்
கண்டதும் தானாய்க் கவிதை பிறக்க
இதயம் மறக்கும் சோகம் !
No comments:
Post a Comment