Tuesday, March 31, 2015

புரிஞ்சியவ நடப்பாளோ .....???

ஒத்தயில சிரிக்கிறா
ஒருவிதமா நடக்குறா
ஆளோடும் பேரோடும்
ஒட்டாம ஒதுங்குறா ...!
வட்டில்சோத்த வெரலாலே
எண்ணிஎண்ணி கொரிக்கிறா
விட்டத்தையே வெறிக்கிறா
விடிஞ்சபின்னே தூங்குறா ...!
கொஞ்சிகொஞ்சி பேசுறா
கொமரிப்பொண்ணு ஒளறுறா
கோடித்துணி உடுத்துறா
கோயில்கொளம் சுத்துறா ...!
உதட்டுச்சாயம் பூசுறா
நெகம்கடிச்சி துப்புறா
நெலக்கண்ணாடி பாக்குறா
நெலயில்லாம தவிக்கிறா ....!
தாளிலேதோ கிறுக்குறா
தாளக்கையால் கசக்குறா
எழுதியெழுதி படிக்கிறா
ஏனோஅதக் கிழிக்கிறா ...!
குறுஞ்சேதி படிக்கிறா
குழந்தபோல துள்ளுறா
குறுகுறுன்னு பாக்குறா
குசுகுசுன்னு பேசுறா ....!
பதினெட்டு வயசுல
பக்குவமும் பத்தல
ஆசமவ இவளுக்கு
ஆனதென்ன புரியல ....!
காதலோ கத்தரிக்காயோ
கடவுள்தான் காக்கணும்
அப்பனுக்கு தெரிஞ்சுபுட்டா
அறிவாளத் தூக்கிடுவான்... !
பெத்தமனசு துடிக்குது
பாவிமவ நெனப்பிலே
புத்திமதி சொன்னாலும்
புரிஞ்சியவ நடப்பாளோ ....??

No comments:

Post a Comment