Wednesday, March 11, 2015

நிலையென்று மாறுமோ ....???





இனம்விட்டு மணமுடித்தால் உறவினின்று ஒதுக்கிடுவார் 
சினங்கொண்டு பொறுமையின்றி பழிவாங்கத் துடித்திடுவார் 
மனங்கொத்தி ரணமாக்கி வலிகண்டு உளம்மகிழ்வார்
அனல்மேலே புழுபோலே துடிப்பதையும்  ரசித்திருப்பார்  !

துவண்டாலும் சரிந்தாலும் அரவணைக்க மறுத்திடுவார் 
கவலையிலே உழன்றாலும் கடுகளவும் மனமிரங்கார் 
சவமாகிக் கிடந்திடினும் கரையாது இறுகிநிற்பார் 
புவனத்தில் கலப்புமணம் எளிதாகும் தினம்வருமோ ....???

No comments:

Post a Comment