Wednesday, March 11, 2015

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்

https://www.youtube.com/watch?v=OucHcTfk_Xg


எண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் தாளினிலே 
எழுதி வைத்தேன் கவிதையென்ற பேரினிலே ! 

வண்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் செடியினிலே 
வண்டுகளை ஈர்த்திடும் மதுச் சுவையினிலே ! 

மழலைப் பூக்கள் மகிழ்ந்திருக்கும் பள்ளியிலே 
சிங்காரமாய் பவனி வரும் சீருடையிலே ! 

வெள்ளிப் பூக்கள் முளைத்திருக்கும் வானத்திலே 
விழிசிமிட்டி ஒளி கூட்டும் இரவினிலே ! 

கோலப் பூக்கள் படர்ந்திருக்கும் மார்கழியிலே 
கோதையர் விரல் வண்ணத்தில் வீதியிலே ! 

நட்பு பூக்கள் நிறைந்திருக்கும் எழுத்துதளத்தினிலே 
களித்திருக்கும் அழகிய தமிழ் சொர்க்கத்திலே ! 

காதல் பூக்கள் கவிபாடும் கடற்கரையிலே 
கண்களாலே கதை பேசும் மணல்வெளியிலே ! 

நுரை பூக்கள் பொங்கிவரும் கரையிலே 
பாதம் நனைத்து பையச்செல்லும் கடலுக்குள்ளே ! 

கன்னி பூக்கள் வரம்கேட்கும் கோயிலிலே 
கல்யாண மாலை பூக்கும் இறையருளிலே ! 

பனிப் பூக்கள் குடியிருக்கும் இலைகளிலே 
பரிதிமுகம் கண்டு மறையும் காற்றினிலே ! 

மேகப் பூக்கள் ஓய்வெடுக்கும் மலைமேனியிலே 
மெல்லமெல்ல கலைந்து போகும் உயரத்திலே ! 

கண்ணீர் பூக்கள் பெருக்கெடுக்கும் விழிகளிலே 
பரிசுபெற்ற சேதி கேட்ட நொடியினிலே ! 

பூக்களெல்லாம் சிரித்திட 
பூரிப்புடன் கைக்குலுக்குவோம் .....!!!

No comments:

Post a Comment