குறுநகை பூக்கும் குமரியின் கன்னம்
சிறுவிரல் தீண்ட நகும் .
வெட்கத்தில் பாவை வதனம் சிவந்திடும்
பெட்டிக்குள் மாதுளைமுத் தாய் .
கிள்ளைமொழி பேசியே கிள்ளுவா லுள்ளத்தைத்
தள்ளா டிடுமே மனம் .
மருதாணி யிட்ட மடந்தையின் கைகள்
குருதிபோல் தோன்றும் சிவந்து .
செங்கனியின் தீஞ்சுவையோ செவ்விதழின் தேன்சுவையோ
நங்கையிவள் முத்தச் சுவை .
மையல் நகையொடு மைவிழியாள் நோக்கிட
பையவே காதலரும் பும்
பின்னலில் சூடிய பிச்சிப்பூ வாசத்தில்
தன்னை யிழக்கும் மனம்
முத்துப்பல் சிந்திடும் மோகனப் புன்னகைப்
புத்தம் புதுமல ராய் .
ஏகாந்த வேளையில் ஏந்திழையின் எண்ணமே
பாகாய் இனிக்கும் ருசி .
நாணச் சிரிப்பும் நளின நடையழகும்
காணக் கிடைக்கா வரம்
சிறுவிரல் தீண்ட நகும் .
வெட்கத்தில் பாவை வதனம் சிவந்திடும்
பெட்டிக்குள் மாதுளைமுத் தாய் .
கிள்ளைமொழி பேசியே கிள்ளுவா லுள்ளத்தைத்
தள்ளா டிடுமே மனம் .
மருதாணி யிட்ட மடந்தையின் கைகள்
குருதிபோல் தோன்றும் சிவந்து .
செங்கனியின் தீஞ்சுவையோ செவ்விதழின் தேன்சுவையோ
நங்கையிவள் முத்தச் சுவை .
மையல் நகையொடு மைவிழியாள் நோக்கிட
பையவே காதலரும் பும்
பின்னலில் சூடிய பிச்சிப்பூ வாசத்தில்
தன்னை யிழக்கும் மனம்
முத்துப்பல் சிந்திடும் மோகனப் புன்னகைப்
புத்தம் புதுமல ராய் .
ஏகாந்த வேளையில் ஏந்திழையின் எண்ணமே
பாகாய் இனிக்கும் ருசி .
நாணச் சிரிப்பும் நளின நடையழகும்
காணக் கிடைக்கா வரம்
( குறள் வெண்பாக்கள் )
No comments:
Post a Comment