Friday, March 6, 2015

நினைவில் அவள் ....!!




குறுநகை பூக்கும் குமரியின் கன்னம் 
சிறுவிரல் தீண்ட நகும் . 

வெட்கத்தில் பாவை வதனம் சிவந்திடும் 
பெட்டிக்குள் மாதுளைமுத் தாய் . 

கிள்ளைமொழி பேசியே கிள்ளுவா லுள்ளத்தைத் 
தள்ளா டிடுமே மனம் . 

மருதாணி யிட்ட மடந்தையின் கைகள் 
குருதிபோல் தோன்றும் சிவந்து . 

செங்கனியின் தீஞ்சுவையோ செவ்விதழின் தேன்சுவையோ 
நங்கையிவள் முத்தச் சுவை . 

மையல் நகையொடு மைவிழியாள் நோக்கிட 
பையவே காதலரும் பும் 

பின்னலில் சூடிய பிச்சிப்பூ வாசத்தில் 
தன்னை யிழக்கும் மனம் 

முத்துப்பல் சிந்திடும் மோகனப் புன்னகைப் 
புத்தம் புதுமல ராய் . 

ஏகாந்த வேளையில் ஏந்திழையின் எண்ணமே 
பாகாய் இனிக்கும் ருசி . 

நாணச் சிரிப்பும் நளின நடையழகும் 
காணக் கிடைக்கா வரம்
 

       ( குறள் வெண்பாக்கள் )

No comments:

Post a Comment