Wednesday, March 11, 2015

கண்வளராய் .... கண்வளராய் ....!!





என்மடி சாய்ந்து தமிழ்த்தாயே நீ துயில வேண்டும் 
>>>>>உன்எழில் கண்டு எனைமறந்து நான் ரசிக்க வேண்டும் !! 
என்விரல் கோதும் சுகத்தில் நீ மெய்சிலிர்க்க வேண்டும் 
>>>>>அந்தநிலை கண்ட பரவசத்தில் நான் மகிழ வேண்டும் !! 
என்குரல் மீட்டும் தாலாட்டில் உன்விழி சொக்க வேண்டும் 
>>>>>அந்த சுகந்தனிலே சொர்க்கத்தை நீ உணர வேண்டும் !! 
என்இதழ் சிந்தும் முத்தத்தில் நீ நெகிழ வேண்டும் 
>>>>>அந்த பூரிப்பில் எனக்கு நீ வரமருள வேண்டும் !! 
உன்வரத்தால் நான் தேன்தமிழில் கவிபுனைய வேண்டும் 
>>>>>அந்த கவிகண்டு உன்கரங்கள் எனை அணைக்க வேண்டும் !!!

No comments:

Post a Comment