Monday, March 16, 2015

பாவையே வாட்டமேன் ....??




பாதஞ் சிவந்ததேன் பாவையே வாட்டமேன் 
நாதனைக் காணவே நாட்டமோ ? - வேதனையால் 
கண்ணீர் பெருக்கெடுத் துக்காய்ந்து போனதே 
பெண்ணின் கவலை பெரிது . 

நீங்கா நினைவுகளால் நிம்மதி போயிற்றோ 
தூங்கா விழிகளில் துக்கமோ ? - ஏங்காதே 
கூடையில் வைத்தப்பூ கொட்டுமுன்னே வந்திடுவான் 
கோடை மழையாய்க் குளிர்ந்து .

No comments:

Post a Comment