பாதஞ் சிவந்ததேன் பாவையே வாட்டமேன்
நாதனைக் காணவே நாட்டமோ ? - வேதனையால்
கண்ணீர் பெருக்கெடுத் துக்காய்ந்து போனதே
பெண்ணின் கவலை பெரிது .
நீங்கா நினைவுகளால் நிம்மதி போயிற்றோ
தூங்கா விழிகளில் துக்கமோ ? - ஏங்காதே
கூடையில் வைத்தப்பூ கொட்டுமுன்னே வந்திடுவான்
கோடை மழையாய்க் குளிர்ந்து .
No comments:
Post a Comment