Tuesday, March 17, 2015

சிசுவின் குரல்




கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லத்தானா 
பத்துத் திங்கள் சுமந்திருந்தாய் ? 
அள்ளி அணைத்து முலைப்பால் புகட்டாமல் 
கண் திறக்குமுன்னே மண்புகச் செய்வாயோ? 

பசு ஈன்ற பெண்கன்றைப் போற்றிய நீ 
உன் மகவு பெண்ணென்றால் தூற்றலாமோ ? 
சிசு பேதம் பார்க்கத் துணிந்த 
நீயும் ஒரு பெண்தானே ? 

உறவுகள் உதாசீனப்படுத்தினாலும் 
உதிரப்பால் நீ தர மறுக்கலாமா ? 
துறவு மேற்கொண்டேனும் என்னைத் 
தூர எறியாமல் காப்பாயா ? 

கல்லுக்குள்ளும் ஈரமுண்டே -எந்தாயே! 
இத்தரணியில் என்னை வாழவிடு ! 
நல்லதோர் வீணையாய் உன் பெருமை 
நானிலம் போற்ற நானும் செய்வேன் !!

No comments:

Post a Comment