Friday, March 6, 2015

நாளைய தமிழும் தமிழரும்




தமிழுக்கென்ன? சிறந்திருப்பாள் 
தமிழர்நாவில் தவழ்ந்திருப்பாள் 
விண்ணும்மண்ணும் உள்ளவரை 
வியக்கும்வண்ணம் வாழ்ந்திருப்பாள் ! 

ஐம்புலனில் கலந்திருப்பாள் 
ஐம்பாவில் மகிழ்ந்திருப்பாள் 
செம்மொழியாள் உயர்ந்திருப்பாள் 
செருக்குடனே வலம்வருவாள் ! 

இலக்கியத்தால் புவியீர்ப்பாள் 
இன்சுவையால் மனம்வெல்வாள் 
பிறமொழிகள் புறந்தள்ளி 
பிரகாசமாய் ஒளிர்ந்திடுவாள் ! 

மாற்றம்வந்து மானுடரின் 
மாயத்திரை விலக்கிவிடும் 
தமிழ்ப்பாவே பாவாகும் 
தமிழ்மொழியே பாராளும் ! 

உலகத்தமிழர் ஒன்றிணைவர் 
உரிமையாவும் மீட்டெடுப்பர் 
உயர்பதவி வகித்திருப்பர் 
உலகோர்தரத்தில் முன்னிருப்பர் ! 

பாரம்பரியம் போற்றிடுவர் 
பாரினில்நற் பேரெடுப்பர் 
கலாச்சாரம் காத்திடுவர் 
கன்னித்தமிழால் களிப்புறுவர் ....!! 

No comments:

Post a Comment