வெள்ளருவி பொங்கி விழுந்து
>>>>வண்ணநீரில் கலக்கும் !
கிள்ளிவைத்த முகில் கூடி
>>>>கிரிவலம் போகும் !!
தள்ளும்நுரை கரை யோரம்
>>>>சலதரங்கம் இசைக்கும் !
தெள்ளு தமிழ் தென்றலிலே
>>>>தெம்மாங்கு பாடும் !!
பள்ளிகொள்ளும் மலை மேனியில்
>>>>வெண்மேகக் கூட்டம் !
மெள்ளவந்து எட்டிப் பார்த்து
>>>>தென்னை அருவிரசிக்கும் !!
துள்ளியோடும் நதி நீரில்
>>>>சேல்கெண்டை மீனும்
புள்ளிவைத்த கோலம் போல
>>>>வளைந்துநெளிந்து ஓடும் !!
கள்ளமில்லா சிரிப்பில் பூக்கள்
>>>>கல்மனதையும் கரைக்கும் !
உள்ளமெல்லாம் உவகை பொங்க
>>>>உலகத்தையே மறக்கும் !!
அள்ளுமழகில் இயற்கை கூட
>>>>கடவுளாகத் தெரியும் !
கொள்ளைபோன எந்தன் இதயம்
>>>>கவிதைபல படைக்கும் !!
>>>>வண்ணநீரில் கலக்கும் !
கிள்ளிவைத்த முகில் கூடி
>>>>கிரிவலம் போகும் !!
தள்ளும்நுரை கரை யோரம்
>>>>சலதரங்கம் இசைக்கும் !
தெள்ளு தமிழ் தென்றலிலே
>>>>தெம்மாங்கு பாடும் !!
பள்ளிகொள்ளும் மலை மேனியில்
>>>>வெண்மேகக் கூட்டம் !
மெள்ளவந்து எட்டிப் பார்த்து
>>>>தென்னை அருவிரசிக்கும் !!
துள்ளியோடும் நதி நீரில்
>>>>சேல்கெண்டை மீனும்
புள்ளிவைத்த கோலம் போல
>>>>வளைந்துநெளிந்து ஓடும் !!
கள்ளமில்லா சிரிப்பில் பூக்கள்
>>>>கல்மனதையும் கரைக்கும் !
உள்ளமெல்லாம் உவகை பொங்க
>>>>உலகத்தையே மறக்கும் !!
அள்ளுமழகில் இயற்கை கூட
>>>>கடவுளாகத் தெரியும் !
கொள்ளைபோன எந்தன் இதயம்
>>>>கவிதைபல படைக்கும் !!
No comments:
Post a Comment