Thursday, March 19, 2015

அள்ளும் அழகு ...!!





வெள்ளருவி பொங்கி விழுந்து 
>>>>வண்ணநீரில் கலக்கும் ! 
கிள்ளிவைத்த முகில் கூடி 
>>>>கிரிவலம் போகும் !! 

தள்ளும்நுரை கரை யோரம் 
>>>>சலதரங்கம் இசைக்கும் ! 
தெள்ளு தமிழ் தென்றலிலே 
>>>>தெம்மாங்கு பாடும் !! 

பள்ளிகொள்ளும் மலை மேனியில் 
>>>>வெண்மேகக் கூட்டம் ! 
மெள்ளவந்து எட்டிப் பார்த்து 
>>>>தென்னை அருவிரசிக்கும் !! 

துள்ளியோடும் நதி நீரில் 
>>>>சேல்கெண்டை மீனும் 
புள்ளிவைத்த கோலம் போல 
>>>>வளைந்துநெளிந்து ஓடும் !! 

கள்ளமில்லா சிரிப்பில் பூக்கள் 
>>>>கல்மனதையும் கரைக்கும் ! 
உள்ளமெல்லாம் உவகை பொங்க 
>>>>உலகத்தையே மறக்கும் !! 

அள்ளுமழகில் இயற்கை கூட 
>>>>கடவுளாகத் தெரியும் ! 
கொள்ளைபோன எந்தன் இதயம் 
>>>>கவிதைபல படைக்கும் !!

No comments:

Post a Comment