
தான தந்த தனத்த தத்த தனதானா
தான தந்த தனத்த தத்த தனதானா
தான தந்த தனத்த தத்த தனதானா
ஆசை கொண்ட மனத்தை விட்டு விலகாமல்
ஆளு மன்பி னணைப்பில் நித்தம் மகிழ்வேனோ!
வீசு தென்ற லுளத்தி னிக்கு மிதம்போலும்
மேவு மின்பம் வெளிப்ப டுத்த வியலாதே!
ஓசை யின்றி முகிழ்த்த முத்த விசையாலே
ஊட லின்றி மயக்க முற்று விழுவாயோ?
தேசு விஞ்சு முகத்தி லச்ச மினுமேனோ
தேவி யுன்ற னுயிர்த்து டிப்பு மறிவேனே!!
ஆளு மன்பி னணைப்பில் நித்தம் மகிழ்வேனோ!
வீசு தென்ற லுளத்தி னிக்கு மிதம்போலும்
மேவு மின்பம் வெளிப்ப டுத்த வியலாதே!
ஓசை யின்றி முகிழ்த்த முத்த விசையாலே
ஊட லின்றி மயக்க முற்று விழுவாயோ?
தேசு விஞ்சு முகத்தி லச்ச மினுமேனோ
தேவி யுன்ற னுயிர்த்து டிப்பு மறிவேனே!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment