
தந்தந்த தனத்தன தாத்தன தனதானா
தந்தந்த தனத்தன தாத்தன தனதானா
தந்தந்த தனத்தன தாத்தன தனதானா
இன்றிங்கு வருத்திடு நோய்க்கொரு விடையேசொல்
என்றென்று முனைத்தொழு வார்க்கருள் முருகோனே !
குன்றந்த னிலற்புத மாய்க்கவி னிசையோடே
கொஞ்சுந்த மிழைச்செவி கேட்டுளம் மகிழாதோ?
துன்பங்கள் விரட்டிட வார்த்தைக ளினியேது
சொந்தங்கொ ளநற்றுணை யாய்க்குற மகளோடு
நன்றிங்கு விருப்பொடு போற்றுவ ரிடர்தீர
நஞ்சுண்ட சிவத்துட னாட்கொள வருவாயே !!
என்றென்று முனைத்தொழு வார்க்கருள் முருகோனே !
குன்றந்த னிலற்புத மாய்க்கவி னிசையோடே
கொஞ்சுந்த மிழைச்செவி கேட்டுளம் மகிழாதோ?
துன்பங்கள் விரட்டிட வார்த்தைக ளினியேது
சொந்தங்கொ ளநற்றுணை யாய்க்குற மகளோடு
நன்றிங்கு விருப்பொடு போற்றுவ ரிடர்தீர
நஞ்சுண்ட சிவத்துட னாட்கொள வருவாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment