
கொலைகார நுண்ணுயிரி கொரோனாவென் னும்பேரில்
உலகெங்கும் ஊடுருவி உயிர்பயத்தை உண்டாக்கக்
கலக்கத்தில் மக்களெல்லாம் கண்களிலே பீதியுடன்
உலவுகின்ற கோலத்தை ஒருநாளும் மறப்போமோ ??
உலகெங்கும் ஊடுருவி உயிர்பயத்தை உண்டாக்கக்
கலக்கத்தில் மக்களெல்லாம் கண்களிலே பீதியுடன்
உலவுகின்ற கோலத்தை ஒருநாளும் மறப்போமோ ??
தொட்டாலே ஒட்டுமிது சூழ்ந்துநம்மை வதஞ்செய்யும்
கட்டுக்குள் அடங்காமல் களியாட்டம் தான்போடும்
விட்டுவிட்டால் அந்தகன்போல் விரட்டிவந்தே உறவாடி
மட்டற்ற மகிழ்வோடு மரணத்தைப் பரிசளிக்கும் !!
கட்டுக்குள் அடங்காமல் களியாட்டம் தான்போடும்
விட்டுவிட்டால் அந்தகன்போல் விரட்டிவந்தே உறவாடி
மட்டற்ற மகிழ்வோடு மரணத்தைப் பரிசளிக்கும் !!
மருந்தில்லை இதற்கென்று மானுடரே மருளாதீர்
இருக்கிறதே எளியவழி இதையறிந்து பயன்பெறுவீர்
திரிகடுக சூரணமும் திருத்துழாயும் வில்வவேம்பும்
சுருங்கத்தான் காய்ச்சியுண்ணத் துரத்திடலாம் நோய்த்தொற்றை!!
இருக்கிறதே எளியவழி இதையறிந்து பயன்பெறுவீர்
திரிகடுக சூரணமும் திருத்துழாயும் வில்வவேம்பும்
சுருங்கத்தான் காய்ச்சியுண்ணத் துரத்திடலாம் நோய்த்தொற்றை!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment