
தானன தனன தானன தான
தானன தனன ....தானானா
தானன தனன ....தானானா
வீசிய வளியில் நாணலு மாட
வேலியில் மலர்க ளாடாதோ ?
வீணையி லசையும் மைவிழி யாளின்
விரல்களும் நளினம் பூணாதோ ?
பேசிடு மிதழ்க ளோசையில் மோகம்
பீறிடு மினிமை நீளாதோ ?
பேதையின் மடியி லாசைவி டாது
பீலியின் வருட லாகாதோ ?
நேசமு டனவ ராடிடும் வேளை
நீலவி ழிகளும் மூடாதோ ?
நேரமு ழுமையு மோடிய போதும்
நீடுயர் மகிழ்வு கூடாதோ ?
பாசமும் பரிவும் பாதியி லூடும்
பார்வையி லமைதி மேவாதோ ?
பாவையி னிடையில் மேகலை யோடு
பாதகொ லுசொலி மீளாதோ ??
வேலியில் மலர்க ளாடாதோ ?
வீணையி லசையும் மைவிழி யாளின்
விரல்களும் நளினம் பூணாதோ ?
பேசிடு மிதழ்க ளோசையில் மோகம்
பீறிடு மினிமை நீளாதோ ?
பேதையின் மடியி லாசைவி டாது
பீலியின் வருட லாகாதோ ?
நேசமு டனவ ராடிடும் வேளை
நீலவி ழிகளும் மூடாதோ ?
நேரமு ழுமையு மோடிய போதும்
நீடுயர் மகிழ்வு கூடாதோ ?
பாசமும் பரிவும் பாதியி லூடும்
பார்வையி லமைதி மேவாதோ ?
பாவையி னிடையில் மேகலை யோடு
பாதகொ லுசொலி மீளாதோ ??
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment