
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதானா
தனதன தனதன ...... தனதானா
வளமிகு வயல்வெளி யிடையொரு தலமதில்
மரகத மயிலுட னுறைவோனே
மனமது மகிழ்வுற முருகனு னருகினில்
வடிவொடு குறமக ளிணைவாளே
மரகத மயிலுட னுறைவோனே
மனமது மகிழ்வுற முருகனு னருகினில்
வடிவொடு குறமக ளிணைவாளே
ஒளிவிடு விழிகளு மருள்மழை பொழிகையி
லுருகிய வுளமது குளிராதோ
உளறிடு மிதயமும் மொழியது குழறிட
உனையென துளறிய விழைவேனே
லுருகிய வுளமது குளிராதோ
உளறிடு மிதயமும் மொழியது குழறிட
உனையென துளறிய விழைவேனே
குளமென விழிகளும் பெருகிட வருபவர்
குறைகளும் விலகிட நெகிழ்வாரே
குமரனின் மலர்முகம் பரவச நிலையொடு
குளிர்நில வெனமிக வெழிலோடே
குறைகளும் விலகிட நெகிழ்வாரே
குமரனின் மலர்முகம் பரவச நிலையொடு
குளிர்நில வெனமிக வெழிலோடே
தெளிவுட னுனதடி பணிவொடு தொழுபவர்
திருமண வரமது தருவாயே
திருவுட னுறையுளும் பரிவுட னருளிடு
சிறுவையி னழகிய பெருமாளே .
திருமண வரமது தருவாயே
திருவுட னுறையுளும் பரிவுட னருளிடு
சிறுவையி னழகிய பெருமாளே .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment