
தந்தனன தானதன
தந்தனன தானதன
தந்தனன தானதன தனதானா (அரையடிக்கு)
தந்தனன தானதன
தந்தனன தானதன தனதானா (அரையடிக்கு)
மஞ்சள்வெயில் மாலைதனில்
வண்டுலவு சோலைதனில்
வந்தமலர் வாசமது நிறையாதோ
வண்டுலவு சோலைதனில்
வந்தமலர் வாசமது நிறையாதோ
மஞ்சுதவழ் வானழகை
யுண்டமன மாவலொடு
வஞ்சிமக ளோடிணைய விழையாதோ
யுண்டமன மாவலொடு
வஞ்சிமக ளோடிணைய விழையாதோ
நெஞ்சுருகி யோடிவரு
மின்பமது கூடவரும்
நின்றுவிடு மோகனவு மெனவாடி
மின்பமது கூடவரும்
நின்றுவிடு மோகனவு மெனவாடி
நெம்பியெழு மாசையொடு
பொங்கிவரு காதலோடு
நிண்டிவிளை யாடவவ ளருகோடே
பொங்கிவரு காதலோடு
நிண்டிவிளை யாடவவ ளருகோடே
தஞ்சமென நானடைய
மஞ்சமென மேனியொடு
தங்கமக ளோடுறவி லிணைவேனே
மஞ்சமென மேனியொடு
தங்கமக ளோடுறவி லிணைவேனே
தந்தனன தானதன
வென்று நடமாடி வரு
தண்டலையி லேமயிலி னழகோடே
வென்று நடமாடி வரு
தண்டலையி லேமயிலி னழகோடே
அஞ்சலென வேயமுது
தந்தவளு மூடலுற
அன்புமிக வேதழுவி யணைவேனே
தந்தவளு மூடலுற
அன்புமிக வேதழுவி யணைவேனே
அந்திபகல் நாளுருள
என்றும்பிரி யாதபடி
அன்றிலென வாழவரம் பெறுவேனோ ?
என்றும்பிரி யாதபடி
அன்றிலென வாழவரம் பெறுவேனோ ?
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment