Pages

Saturday, January 26, 2019

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!

மானாட மயிலாட மொட்டோடு மலராட மதுவுண்ட வண்டுமாடும்
மழையோடு மரமாட மலைமீது தாவியே வாலாட்டி மந்தியாடும் !!

வானோடு முகிலாட ஒளியோடு மதியாட விண்மீன்க ளுடனாடிடும் !
வற்றாத நதியாட அலையோடு கயலாட வளையோடு நண்டுமாடும் !!

மீனாளி னழகான விழியனைய சேலாட அன்னந்த(ன்) இணையொடாடும்
மெல்லவரு டுந்தென்ற லுடனாடு மிலைமீது வெண்பனித் துளிகளாடும் !!
ஈனாத பசுவாட அதனோடு விளையாட ஆடிவா என்கண்ணனே !!
இனிதான வேய்ங்குழல் நாதத்தி லுருகியே நானுமுன் னோடாடுவேன் !!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment