Pages

Monday, June 15, 2015

மிதந்தாள் மங்கை ....!!



கயலாடும் ஆற்றினிலே நீந்திடவே மிகவிரும்பிக் 
கற்றாள் நீச்சல் 
பயத்தோடு பழகியவள் நாளாகப் பயம்விலகி
பாய்ந்தாள் ஆற்றில் 
சுயமாகப் பலவிதமாய் நீச்சலிலே சாதித்தாள்
சொந்த மண்ணில் 
வியந்தோரும் போற்றினரே விருதுகளும் தந்தனரே 
மிதந்தாள் மங்கை !

No comments:

Post a Comment