வண்ணப் பாடல் ....!!!
* * * * * * * ** * * * * * * * * *
தாந்தன தானன தந்தன தான
தாந்தன தானன தனதானா ( அரையடிக்கு )
* * * * * * * ** * * * * * * * * *
தாந்தன தானன தந்தன தான
தாந்தன தானன தனதானா ( அரையடிக்கு )
ஓங்கிய மாமர மொன்றினி லாட
ஓம்பிய தோழியி னருகோடே
ஊஞ்சலி லாடிடு மொண்டொடி யாளை
ஊர்ந்திடு மேகமு மறியாதோ
ஓம்பிய தோழியி னருகோடே
ஊஞ்சலி லாடிடு மொண்டொடி யாளை
ஊர்ந்திடு மேகமு மறியாதோ
மாங்கனி வீழம டந்தையு மாட
வாஞ்சையில் மேனியை நனையாதோ
மாந்திய போதுக ருங்குயி லாளும்
வாங்கிய மாயிசை பொழிவாளே
வாஞ்சையில் மேனியை நனையாதோ
மாந்திய போதுக ருங்குயி லாளும்
வாங்கிய மாயிசை பொழிவாளே
ஈங்கொரு காயினில் வண்டுக ளாட
ஏந்திழை யாளவள் மிரளாளோ
ஏங்கிய வாறுபி ரிந்திடு போதி
லீன்றவள் வந்திட வொளிவாளோ
ஏந்திழை யாளவள் மிரளாளோ
ஏங்கிய வாறுபி ரிந்திடு போதி
லீன்றவள் வந்திட வொளிவாளோ
தூங்கிய போதிலு மின்புறு மாறு
தூண்டிடு மூசலின் நினைவோடே
தோன்றிடு தேயவ னன்பொடு தூது
சோர்ந்திட வேவிடல் முறைதானோ !!
தூண்டிடு மூசலின் நினைவோடே
தோன்றிடு தேயவ னன்பொடு தூது
சோர்ந்திட வேவிடல் முறைதானோ !!
சியாமளா ராஜசேகர்

No comments:
Post a Comment