Pages

Tuesday, May 8, 2018

சுரமேழில் மீட்டும் சுகம் ...!!!

விரல்க ளசைந்திட வீணையும் பேசும் 
குரலி லினிய குயிலிசைக் கேட்கும் 
வரமாய்க் கவிதை வனப்பினைக் கூட்டும் 
மரத்த விதயம் மகிழ்வில் நனைய 
இரவில் வருடு மினிய வளியாய் 
சுரமேழில் மீட்டும் சுகம். 

( பஃறொடை வெண்பா) 

No comments:

Post a Comment