Sunday, April 22, 2018

இதழகல் வெண்பா !!

குறள் வெண்பா
*****************
தென்ற லணைக்கையில் தேனிலா காய்கையில்
கன்னி யழகினைக் காண்.
நேரிசை வெண்பா
*********************
அழகிய நெற்கதி ராடிடக் கண்டேன்
கழனி யிலடித்த காற்றில்! - செழித்த
நிலத்தி னெழிலால் நெகிழ்ந்தென்றன் நெஞ்சில்
கலந்தினிக்கச் செய்ததே கார்.
இன்னிசை வெண்பா
***********************
எந்தை யிணையடி யெண்ணி யழைத்திடச்
செந்தில் நகரினில் சிந்தி லிசைத்திடச்
சிந்தை யினிக்கச் சிகண்டியி லேறிய
கந்த னெழிலினைக் காண்.

No comments:

Post a Comment