Wednesday, September 13, 2017

ஆதி மூல கணபதி !

ஆதி மூல கணபதி சிவ
காமி பாலன் கணபதி
நாத வேத ரூப மான
ஞான தெய்வம் கணபதி!
வீதி தோறும் குடியிருக்கும்
வெள்ளிக் கொம்பன் கணபதி
ஆனை முகமும் பானை வயிறும்
கொண்ட அழகு கணபதி!
அறுகுமாலை சூட்டியே வழிபடும் அடியவர்
அல்லல்களைப் போக்கிடும் ஐங்கரனைப் போற்றுவோம்
விருப்புடன்முக் கனிகளும் அவல்கடலை மோதகம்
வேழமுகத் தானுக்குப் படைத்துவிட்டுப் பாடுவோம்!
ஆரவார மின்றியே அன்புடன் தொழுதிட
ஆறுமுகன் அண்ணனின் ஆசிகளும் கிடைத்திடும்!
பாரதத்தை எழுதிட தந்தமதை ஒடித்தவர்
பாதமலர் பற்றிட பாழ்வினைகள் பறந்திடும்!
தும்பிக்கை ஆட்டியே சுண்டெலியில் சுற்றிடும்
தூயவனின் தரிசனம் தொல்லைகளை ஓட்டிடும்!
நம்பிக்கை வைத்தவர் நலவாழ்வு பெற்றிட
நாடிவந்து அருளிடும் நாயகனை வணங்குவோம்!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment