Pages

Sunday, June 25, 2017

இதயம் நனையுமே ....!!!

அருண னுதிக்கு மழகிய தருணம்
இருளும் விலகு மினிதாய்!
பனிவிழுஞ் சோலை பார்த்தால்

தனிசுகங் கிட்டும்!
சிறகுக ளசைக்கும்
பறவைக லொலியும்
மயங்கிடச் செய்யும் மனத்தை
இயற்கை வரத்தா லிதயம் நனையுமே!


( இணைக்குறள் ஆசிரியப்பா )

No comments:

Post a Comment