Pages

Tuesday, March 21, 2017

கோகுல பாலா !



கோமகனே நீவாராய் கோகுல பாலா! - உன்
நாமமே நாளும் சொல்வேன் நாதனே வாராய்!
பாதமலர் பற்றிடுவேன் பரந்தாமா வாராய்! - நால்
வேதமோதி வாழ்த்திடுவேன் வாராய் மணிவண்ணா!


 பாடிடுவேன் நித்தமுனைப் பரம்பொருளே வருவாயே!
ஆடிடுவாய் ஆனந்தமாய் ஆயர்ப்பாடி நாயகனே!
கூடிவரும் கோபியரின் கொஞ்சுமொழி கேட்கலையோ?

கோடியின்பம் யாம்பெறவே கோபாலா வந்திடடா!


பாராயோ கண்திறந்து பவளவாய்ப் பேரழகா!
ஆராரோ நான்பாட ஆனந்தமாய் இமைமூடு!
தீராத ஆவலினால் தீந்தமிழில் பாடுகின்றேன்!
வாராயோ கண்மணியே மையலுடன் காத்திருப்பேன்!

No comments:

Post a Comment