Pages

Sunday, June 14, 2015

பறந்தோடும் துயரம் ....!!

அதிகாலைத் துயிலெழுந்து துடிப்புடனே செயல்பட்டால் 
அயர்வு நீங்கும் 
மதிசென்று கதிர்வரவில் இருள்விலகி உள்ளத்தின் 
மயக்கம் தீரும் 
கொதிக்கின்ற இதயத்தின் கொந்தளிப்பும் விலகிவிடும் 
கோபம் மாறும்  
துதிபாடி பக்தியுடன் வேண்டிடிலோ பறந்தோடும் 
துயரம் காண்பீர் !

No comments:

Post a Comment